மேலும் செய்திகள்
ஒளிராத விளக்குகள்... ஓயாத நாய் தொல்லை!
26-Nov-2024
கொசுத்தொல்லைகுருவாயூரப்பன் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும்.- பழனிசாமி, குருவாயூரப்பன் நகர். கால்வாய் அடைப்புஅவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சுத்தம் செய்ய வேண்டும்.- பாபு, டீச்சர்ஸ் காலனி.கழிவுநீர் தேக்கம்பலவஞ்சிபாளையம் பஸ் ஸ்டாப் முன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.- மீனாட்சிசுந்தரம், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)அபாய மின் கம்பம்லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.- முத்துக்குமார், லட்சுமி நகர். (படம் உண்டு)எச்சரித்தும் பயனில்லைஅவிநாசி ரோடு, பத்மாவதிபுரத்தில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)மண்டிய புதர்திருப்பூர், 13வது வார்டு, காந்தி நகர், 80 அடி ரோட்டில் மின்கம்பங்களை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி, கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிய நிலையில் உள்ளது.- சிவசுப்ரமணியன், காந்தி நகர். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைஅங்கேரிபாளையம் - வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வழிநெடுக குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- மனோகரன், வெங்கமேடு. (படம் உண்டு)நாய்த் தொல்லைசெங்குந்தபுரம் முதல் வீதி, நுகர்வோர் கோர்ட் எதிர்புற வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)காத்திருக்கும் ஆபத்துெஷரீப் காலனி, சித்தி விநாயகர் கோவில் முன்புறம் குடிநீர் கேட்வால்வு மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. பாதசாரிகள், வாகனஓட்டிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.- ஹரிஷ் சிவம், ெஷரீப் காலனி. (படம் உண்டு)சாலை சீராகுமா?திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, ராகு - கேது கோவில் அருகே, வேகத்தடையை ஒட்டி சாலை குழியாக உள்ளது. புதிதாக வருவோர் திடீரென தடுமாறுகின்றனர். குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)ரியாக் ஷன்ஒளிர்கிறது விளக்குதிருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சரிசெய்யப்பட்டு தெருவிளக்கு பளிச்சிடுகிறது.- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)சாலை சீரமைப்புமண்ணரை, சத்யா காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.- பிரவீனா, சத்யா காலனி. (படம் உண்டு)
26-Nov-2024