உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய்சாரதா பள்ளி மாணவருக்கு காப்பீடு

ஜெய்சாரதா பள்ளி மாணவருக்கு காப்பீடு

திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 'தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் வாயிலாக பள்ளி சார்பில் விபத்துக் காப்பீடுத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு விபத்தில் யு.கே.ஜி. மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவரது தந்தையிடம், காப்பீடுத் தொகைக்கான காசோலையை அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சுதீஷ், பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கினார். முதல்வர் மணிமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ