உள்ளூர் செய்திகள்

நகை, - பணம் திருட்டு

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 65. மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசிக்கிறார். மகன் முத்துக்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம், அனைவரும் குடும்பத்துடன் திட்டக்குடி சென்றனர். முத்துக்குமாரின் நண்பர் காளிமுத்து, 36 என்பவர், முத்துக்குமாரை பார்க்க வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரண்டு சவரன் நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை