கொங்கு வேளாளர் பள்ளி மாணவியர் அசத்தல்
திருப்பூர்; திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'ஏ--பி பேசும் தினம்' (AEEBEE spoken day) கொண்டாடப்பட்டது. இதில், 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்தனர். மரங்கள் அழிவதற்கு மனிதனே காரணம் என்பதை மவுன மொழி நாடகம் மூலம் நடித்து காட்டினர். பள்ளி முதல்வர் சுமதி, பள்ளி மாணவியரை பாராட்டினார்.