மேலும் செய்திகள்
விநாயகர் கோவிலில் 11ல் கும்பாபிேஷகம்
03-Sep-2025
உடுமலை; உடுமலை யு.கே.சி., நகர் கிணத்தடி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது. உடுமலை யு.கே.சி., நகரில் கிணத்தடி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜைகள், கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாள் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகமும், நேற்று முன்தினம் காலையில் வாஸ்து சாந்தி, ரக்ேஷாகண ேஹாமம், ரக்சாபந்தனம், நடந்தது. மாலையில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், கும்பஸ்தாபனம், மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை, மூல மந்திர யாகம் நடந்தது. இரவில் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்வு நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், மகா சங்கல்பம், வேதிகார்ச்சனை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், மண்டப பூஜை இரண்டாம் கால யாக பூஜை, மூல மந்திர யாகம், நாடி சந்தானம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. மகா அபிேஷகத்துடன் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல் மண்டல பூஜை நடக்கிறது.
03-Sep-2025