மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
19-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ சிறப்பு பூஜையில், நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில், உமா மகேஸ்வரராக உற்சவர் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி முருகநாதசுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை கைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று சனி மகாப் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. மேலும், டி.பி.என். காலனி - காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் - அண்ணாமலையார் கோவில், விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட அனைத்து பகுதி சிவன் கோவில்களிலும் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
19-Oct-2025