உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்கம்பங்களில் விளம்பர பலகை; அபாயம் இருந்தும் அலட்சியம்

மின்கம்பங்களில் விளம்பர பலகை; அபாயம் இருந்தும் அலட்சியம்

உடுமலை; உடுமலை பகுதியில், மின்கம்பங்களில் விதிகளை மீறி, அமைக்கப்படும் விளம்பர பலகைகள் அகற்றப்படாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில், மழைக்காலங்களில், மின்விபத்துகளை தவிர்க்க, மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மின்வாரியம் தெரிவிக்கிறது. ஆனால், அத்துறையினரே, மின்விபத்து ஏற்படும் வகையில், விதிமீறல்களை கண்டுகொள்ளாமல், உள்ளனர். குறிப்பாக, மின்கம்பங்களில், விளம்பர பலகைகள் அமைப்பது உடுமலை பகுதியில், சமீபகாலமாக அதிகரித்துள்ளது. திருப்பூர் ரோடு, பழநி ரோடு உட்பட நகரின் முக்கிய ரோடுகளிலுள்ள அனைத்து மின்கம்பங்களும் விளம்பர பலகைகள் மாட்ட பயன்படும் ஸ்டாண்டாக மாற்றப்படுகிறது.கிராமங்களிலும், இந்த விதிமுறை மீறல் அதிகரித்துள்ளது. இத்தகைய பலகைகள், கம்பத்தின் மையப்பகுதியில், கட்டப்படுவதால், பழுது நீக்குவதற்காக, மின்கம்பத்தில் ஏற பணியாளர்கள் திணற வேண்டியுள்ளது. மழைக்காலத்தில், இந்த பலகைககள் மின்விபத்து ஏற்படுத்தும் என தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சில இடங்களில், டிரான்ஸ்பார்மரிலும் பலகைகள் கட்டப்படுகின்றன. பஸ் ஸ்டாப் அருகில், பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள், அவை காற்றில் அசையாமல் இருக்க, அருகிலுள்ள மின்கம்பத்தில், அதை கட்டி வைக்கின்றனர். இதனால், பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய விளம்பர பலகைகளை பாரபட்சமில்லாமல் அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே, மின்வாரிய பணியாளர்களும், பொதுமக்களும், மின்விபத்து அச்சத்திலிருந்து விடுபட முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ