திருப்பூருக்கு புதிய ஆர்.டி.ஓ.,
திருப்பூர்; திருப்பூருக்கு புதியஆர்.டி.ஓ., நியமனம் செய்யப்பட்டார். திருப்பூர் வருவாய் கோட்டம், ஐந்து தாலுகாவை உள்ளடக்கி செயல்படுகிறது. வருவாய் கோட்டாச்சியராக மோகனசுந்தரம் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும், 17 துணை ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவ்வகையில், மோகன சுந்தரம் மாற்றப் பட்டு, அவருக்கு பதிலாக ஈரோடு துணை ஆட்சியர் (பயிற்சி), சிவப்பிரகாஷ், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாஷ், விரைவில் பதவியேற்பார் என வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.