தினமலர் சார்பில் அக். 2ல் வித்யாரம்பம்
திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், குழந்தைகளுக்கான, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, ராக்கியாபாளையம் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், அக்., 2ம் தேதி நடக்கிறது. விஜயதசமி நாளில், குழந்தைகள் கற்றலை துவக்குகின்றனர். தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி, குழந்தைகள் கரம் பற்றி, 'அ' என்று எழுதி, நம் முன்னோர்கள் கற்றலை துவக்கி வைத்தனர். பாரம்பரிய வழக்கப்படி, கல்வி கற்றலை துவக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி, விஜய தசமி நாளில் நடத்தப் படுகிறது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்ப நிகழ்ச்சி, விஜய தசமி நாளில் நடக்கிறது. அக். 2ம் தேதி காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, ராக்கியாபாளையம் ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், வித்யாரம்பம் நடைபெற உள்ளது. வாகன வசதி வீடுகளில் உள்ள, இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுடன் வந்து, வித்யாரம்பம் செய்து வைக்கலாம். 'வித்யாரம்பம்' நிகழ்ச்சிக்கு வந்துசெல்ல, அவிநாசி, அன்னுார், அணைப்புதுார், காந்திநகர், சோமனுார், தெக்கலுார் ஆகிய பகுதிகளில் இருந்து வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. வித்யாரம்பம் மூலமாக கல்விப்பயணத்தை துவக்க உள்ள குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்து பயில, விஜயதசமி மாணவர் சேர்க்கைக்கு, 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கவும், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்வந்துள்ளது. கலெக்டர் பங்கேற்பு வித்யாரம்பம் நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர் சிவராம், ஸ்ரீசக்தி கல்லுாரி சேர்மன் தங்கவேல், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் தீபன் தங்கவேல், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் ஞானகுரு ஆகியோர், குழந்தை களுக்கு, வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர். முன்பதிவு செய்யுங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய விரும்புவோர், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை, 96887 53040 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.