உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழநி பாத யாத்திரை விழா கோலாகலம்

பழநி பாத யாத்திரை விழா கோலாகலம்

அவிநாசி: அவிநாசி திருமுருக பக்தர்கள் பேரவையின் 47ம் ஆண்டு பாதயாத்திரை விழாவை முன்னிட்டு காசி விநாயகர் கோவிலில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னாபிஷேகம் நடைபெற்றது.மயில் வாகனத்தில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி நான்கு ரத வீதிகளிலும் மேளதாளத்துடன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கிருத்திகை கமிட்டி, பழனி பாதயாத்திரை அன்னதான கமிட்டி மற்றும் திருமுருக பக்தர்கள் பேரவை பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை, அவிநாசி காசி விநாயகர் கோவிலில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப் படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை