உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கயம் விவேகானந்தா அகாடமியில் பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கயம் விவேகானந்தா அகாடமியில் பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கயம்; காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திறன் பயிற்சியாளர் ராதிகா குழந்தை வளர்ப்பு, குடும்ப வளம், மனவளம், ஆரோக்கிய வாழ்வு குறித்து பேசினார். கடந்தாண்டு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளி நிர்வாகத் தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் பத்மநாபன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர் வளர்ச்சிக்காக, இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை