உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதலுக்கு பெற்றோர் கண்டிப்பு; கழுத்தை அறுத்துக்கொண்ட சிறுவன்

காதலுக்கு பெற்றோர் கண்டிப்பு; கழுத்தை அறுத்துக்கொண்ட சிறுவன்

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், புதுப்பையை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். பெற்றோருடன் வசித்து வரும் சிறுவன், அப்பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்று வருகிறார். சிறுவனுக்கும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இதையறிந்த பெற்றோர் சிறுவனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்து பிளேடால், தன்னை தானே சிறுவன் கழுத்தை அறுத்துக்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். சிறுவனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி