பசும்பொன் தேவர் ஜெயந்தி
அவிநாசி: கருவலுாரில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.