விசைத்தறி கூலி உயர்வு கலெக்டரிடம் மனு
திருப்பூர் : கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பூபதி, முத்துசாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டோர், திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மணிஷ் நாரணவரேவை சந்தித்தனர்.கடந்த ஏப்., மாதம் கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்ட புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை, இதுவரை அமல்படுத்ததாத, பல்லடம், அவிநாசி, தெக்கலுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, புதிய கூலி உயர்வை அமல்படுத்த உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனக்கூறி, கலெக்டரிடம் மனு வழங்கினர்.