உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

திருப்பூர், ;அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கலெக்டர் மனிஷ் நாரணவரே மற்றும் மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோரிடம், குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி நேற்று மனு அளித்தார். மனு அளித்தபின் ஜெயராமன் கூறியதாவது: திருப்பூர் மாநகர பகுதிகளில் கடந்த 30 நாட்களாக குப்பை அள்ளப்படாததால், பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. வாழமுடியாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை பிரச்னை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சத்திலேயே, முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வரவில்லை; பொள்ளாச்சி வழியாக உடுமலை சென்றுள்ளார். இது, தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. திருப்பூருக்கு மட்டும், 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோர் செய்துதந்தனர். கடந்த 2011 தேர்தலில், எதிர்க்கட்சியாக கூட தி.மு.க., வரவில்லை. வரும் 2026 தேர்தலிலும் தி.மு.க., பரிதாப நிலையிலேயே உள்ளது; பத்து இடங்கள் வெற்றிபெற்றாலே மிகப்பெரிய விஷயம்தான். துாய்மை பணியாளர்களை சந்திக்காமல், சினிமா பார்க்க சென்றுள்ளார் முதல்வர். துாய்மை பணியாளர்களை புறக்கணித்ததற்கு, வரும்காலத்தில் மிகப்பெரிய தண்டனை கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ