உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சருகான பொங்கல் கரும்பு தொடரும் குழாய் உடைப்பு

சருகான பொங்கல் கரும்பு தொடரும் குழாய் உடைப்பு

தண்ணீர் வீண்திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலை சீரமைக்கப்பட வேண்டும்.- விஜி, கூட்டுறவு நகர்.n மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. பிரதான குழாய்களை பரிசோதிக்க வேண்டும்.- சிவக்குமார், மங்கலம் ரோடு.n காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., நகர் வடக்கு, 3வது வீதி, மணியகாரன்பாளையம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் மூன்று மாதமாக வீணாகிறது. சாலை சேதமாகியுள்ளது.- செல்வகுமார், ஆர்.வி.இ., நகர்.n அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் வெளியே தெரிகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது.- நடராஜன், பங்களா ஸ்டாப்.n ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக் கண் பாலம் ரயில்வே கேட் எதிரே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- நரேந்திரன், ஊத்துக்குளி ரோடு.n பெரிய கடை வீதி கார்னர் சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர், 20 நாட்களாக வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- அபுதாகிர், பெரிய கடை வீதி.ஓடையில் குப்பைதிருப்பூர், 3வது வார்டு, பழனிசாமி நகர், ஓடையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- உதயகுமார், பழனிசாமி நகர்.பலகை சேதம்மங்கலம் ரோடு, சாமிக் கவுண்டர் வீதியில், மாநகராட்சி அறிவிப்பு பலகை சேதமாகியுள்ளது.- வின்சென்ட், மங்கலம் ரோடு.கால்வாய் சேதம்திருமுருகன்பூண்டி, அண்ணா வீதியில் சாக்கடை கால்வாய் சிலாப் கற்கள் உடைந்து, சேதமாகியுள்ளது. கால்வாயை பராமரிக்க வேண்டும்.- முருகேசன், அண்ணா வீதி.நாய்த்தொல்லைதிருப்பூர், 60வது வார்டு, பிள்ளையார் நகரில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- சம்யுக்தா, பிள்ளையார் நகர்.குப்பைக்குத் தீதிருப்பூர், 38வது வார்டு, முருகம்பாளையம், சூர்யா நகரில் குப்பை தொட்டி இல்லை. குப்பை கொட்டி தீ வைக்கப்படுகிறது. குப்பை தொட்டி வைத்தால், சுகாதாரம் மேம்படும்.- நவீன், சூர்யா நகர்.கால்வாய் அடைப்புஅனுப்பர்பாளையம், திலகர் நகர் ஐந்தாவது வீதி, ஸ்ரீபொன் மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- வரதராஜ், திலகர் நகர்.காய்ந்த கரும்புதிருப்பூர், 37வது வார்டு, கே.செட்டிபாளையம் ரேஷன் கடை முன் பொங்கல் பரிசுத்தொகுப்பு மீதமாகி, வீசப்பட்ட கரும்புகள் இன்னமும் அப்படியே குப்பையாகவே உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்.- பாலு, கே.செட்டிபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை