உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரச்னை ஒன்பது... தீர்வு என்பது எப்போது?

பிரச்னை ஒன்பது... தீர்வு என்பது எப்போது?

தெருவிளக்கு தெரியவில்லைதிருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே அவுட், 4 வது வீதியில் தெருவிளக்கு கம்பத்தையொட்டி மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால், வீதியில் வெளிச்சம் தெரிவதில்லை.- மனோகர், கொங்கு மெயின் ரோடுஆக்கிரமிப்பை அகற்றலாமே!திருப்பூர், பாண்டியன் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் வீட்டின் உபயோகத்துக்காக சட்ட விரோதமாக தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். ரோட்டை ஆக்கிரமித்து அறையும் கட்டியுள்ளனர்.- கோபிநாத், பாண்டியன் நகர்குண்டும் குழியுமான ரோடுஅவிநாசி, மடத்துப்பாளையம் முதல் செம்மாண்டம்பாளையம் வரை செல்லும் பகுதியில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அகலப்படுத்தி தார் ரோடு போட வேண்டும்.- நடராஜன், அவிநாசி.தெருநாய் தொல்லைபல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனாம்பாறையில் தெருநாய்கள் ஏராளமானவை சுற்றி வருகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாத சூழலில் உள்ளனர்.- செல்வராஜ், மீனாம்பாரை.குடிநீர் வீணாகுதுதிருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு சாமுண்டிபுரத்தில் குடிநீர் குழாயின் வால்வு மாற்றப்படாததால், தினமும் குடிநீர் வீணாகி வருகிறது.- ரவிக்குமார், சாமுண்டிபுரம்தெருவிளக்கு எரியவில்லைதிருப்பூர், குமார் நகரில், இருந்து வலையங்காடு செல்லும் ரோட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- ராஜா, வளையன்காடு.தடுமாறும் வாகன ஓட்டிகள்திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு, மூடப்பட்டது. ரோடு போடாத காரணமாக குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.- கணேஷ், பங்களா ஸ்டாப்.போக்குவரத்து நெரிசல்திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ரயில்வே கூட்செட்டுக்கு வரும் லாரிகள், முதல் ரயில்வே கேட் அருகே அபாயகரமாக திருப்பி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.- முருகன், பாளையக்காடுரியாக் ஷன்--------------ரோடு சீரமைக்கப்பட்டதுதிருப்பூர் பி.என்., ரோடு பூலுவபட்டியில் ரோடு மோசமாக இருந்தது. 'தினமலர்' செய்தால், தற்போது, சீரமைக்கப்பட்டு, தார் ரோடு போடப்பட்டுள்ளது.- மனோகரன், பூலுவபட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ