விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்
திருப்பூர்: திருப்பூரிலிருந்து திருச்செந்துார் சென்ற ஒரு கார் மீது, துாத்துக்குடி, மேலக்கரை பகுதியில் ஒரு லாரி மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். தாராபுரம் அலங்கியத்தைச் சேர்ந்த விஜயகுமார், 38, செல்வராஜ், 38 மற்றும் விக்னேஷ், 31 ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் மகேஷ்குமார் 33 என்பவர் காயமடைந்தார்.இதில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்; காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.இதற்கான காசோலைகளை அமைச்சர் கயல்விழி நேற்று அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆர்.டி.ஓ. பெலிக்ஸ்ராஜா உடனிருந்தனர்.