ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
உடுமலை : உடுமலை உழவர்சந்தை ரோட்டில் போடப்படும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடக்கை எடுக்க ேவண்டும்.உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்படுகிறது. இதன் முன் காலை நேரங்களில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் உடனடியாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.