உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்குங்க

கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்குங்க

உடுமலை : உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.கிராம மக்கள், மாணவ, மாணவியர், இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்ல பெரும்பாலும் பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், மக்கள் அதிக அளவில் பஸ்களில் செல்கின்றனர்.உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை