உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

திருப்பூர்; காங்கயம், ஆலம்பாடியை சேர்ந்தவர் நாராயணசாமி, 40; தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.காங்கயம் - சென்னிமலை ரோட்டில் குறுக்கே கடந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த நாராயணசாமியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காங்கயம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ