உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் தொழிலாளி கைது

திருப்பூர் ; திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் தங்கம், 42; கட்டட தொழிலாளி. இரு நாட்கள் முன்பு, இவர், ஆறு வயதுடைய, 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வர, வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மதுபோதையில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதுதொடர்பான புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவரின் உத்தரவின்பேரில், சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ