உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளிப்பதக்கம் வென்ற பிரன்ட்லைன் மாணவர்

வெள்ளிப்பதக்கம் வென்ற பிரன்ட்லைன் மாணவர்

திருப்பூர் : மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி, சென்னை விளையாட்டு பல்கலையில் நடந்தது. இதில், திருப்பூர் 'தி பிரன்ட்லைன்' பள்ளி மாணவன் ரிஷ்வந்த் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்; வெள்ளிப்பதக்கம், 75 ஆயிரம் ரூபாய் காசோலை அவருக்கு வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த ரிஷ்வந்த்தையும், உடற்கல்வி ஆசிரியர் செந்திலையும் பள்ளித் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !