உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு சிறப்பு கூட்டம்

நாளை கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு சிறப்பு கூட்டம்

திருப்பூர்,; கூட்டுறவு பணியாளர்கள், தங்கள் குறைகளை, நாளை நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம். இது குறித்து, திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதி, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, மண்டல அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 407 ல் உள்ள கூட்ட அரங்கில், நாளை (10 ம் தேதி), காலை, 10:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோர், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். பணியாளர்கள் தெரிவிக்கும் குறைகள் மீது, உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை