உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ அத்தனுார் அம்மன் பொங்கல் சாட்டு விழா

ஸ்ரீ அத்தனுார் அம்மன் பொங்கல் சாட்டு விழா

அவிநாசி; அவிநாசி அருகே நாதம்பாளையம் என்கிற சுதந்திர நல்லுாரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவிலில் பொங்கல் சாட்டு விழா நடைபெற்றது. கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கிய விழா இளநீர் காவடி, பொங்கல் விழா, அலங்கார பூஜை ஆகியவற்றுடன் நடைபெற்றது. இன்று மறுபூஜை நடைபெறுகிறது. பொங்கல் சாட்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் செல்லங்குல பங்காளிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !