காங்கயம் விவேகானந்தா பள்ளியில் மாணவத் தலைவர்கள் பதவியேற்பு
திருப்பூர்: காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் தலைமைப்பண்புகள் முதலீட்டு விழா நடந்தது. தேர்வான மாணவத் தலைவர்களுக்கு பள்ளி முதல்வர் பத்மநாபன், பள்ளி அணிகளின் சின்னங்களை வழங்கினார். பதவியேற்ற மாணவத் தலைவர்களையும், துறை சார்ந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர்.