மானியத்தில் தக்கப்பூண்டு விதை
திருப்பூர்; முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள் வினியோகம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், தக்கப்பூண்டு விதை, 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. 'விவசாயிகள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்' என, வேளாண்துறை தெரிவித்துள்ளது.