மேலும் செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்
29-Jun-2025
திருப்பூர்; திருப்பூர், கரட்டாங்காடு, குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது.கரட்டாங்காடு மண்டபத்தில், அதிகாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், மாணிக்கவாசகர், திருநீலகண்ட நாயனார் மற்றும் ரத்தினாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரபூஜை நடந்தது.தொடர்ந்து, உடுமலை அய்யாசாமி குழுவினர் முன்னிலையில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் செய்தனர். மதியம், அன்னம்பாலிப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது.
29-Jun-2025