மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை
பல்லடம்; திருப்பூர் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் அருகே நடந்தது. இதில், திருப்பூர், பல்லடம் பகுதிகளைச் சேர்ந்த, 25 மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அறக்கட்டளை சார்பில், அவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 கிலோ அரிசி நல உதவியாக வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.