மேலும் செய்திகள்
730 தேக்கு மரக்கன்று நடவு; வலிமை காட்டும் பசுமை
04-Dec-2024
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றனர்.இதுவரை, 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கொடுவாய் அடுத்த கோவில்பாளையம் புதுாரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முத்துரத்தினம் என்பவருக்கு சொந்தமான குழியன்காட்டு தோட்டத்தில், 370 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.நில உரிமையாளர் குடும்பத்தினரும், திருப்பூர் ரெப்கோ வங்கி ஊழியர்கள் கூட்டாக இணைந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
04-Dec-2024