மாணவர்கள் தாக்கி மாணவன் காயம்
ஈரோடு: ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன், சேனாதிபதி-பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஹாஸ்டலில் தங்கி உள்ளார். அங்கு சக மாண-வர்கள், 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மாண-வனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன், தன் பெற்றோரிடம் நேற்று தெரிவித்துள்ளார். பெற்றோர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.