வனத்துக்குள் திருப்பூர் -11 காயா மரக்கன்றுகள் நடவு
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், காயா மரம் உட்பட, 522 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கியது; உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். அதன்படி, காங்கயம் பெரியாரியபட்டி அருகே உள்ள பச்சாங்காடு தோட்டத்தில், 522 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. கந்தசாமி என்பவரின் தோட்டத்தில், மகோகனி 200, காயா -195, செம்மரம் -100, வாகை -10, மா -6, வேம்பு -5, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை தலா, 2 என, 522 மரக்கன்றுகள் நடப்பட்டன.