மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்றவர் கைது
28-Oct-2024
நெகமம் : நெகமம், மரம்பிடுங்கிகவுண்டனூரில் 4 வயது குழந்தையுடன் இளம் பெண் கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மரம்பிடுங்கிகவுண்டனூரை சேர்ந்தவர் மணிமேகலை, 20. இவரது கணவர் அஜித்குமார். இவருக்கு 4 வயதில் யாதவ் என்ற மகன் உள்ளார். அஜித்குமார் 2021ம் ஆண்டு இறந்தார். மணிமேகலையின் பெற்றோர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தனர். மணிமேகலை, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற மன உளைச்சலில் இருந்தார். இதனால், மனம் உடைந்த மணிமேகலை, குழந்தையை வயிற்றில் துண்டை வைத்து கட்டிக்கொண்டு, மரம்பிடுங்கிகவுண்டனூரில் உள்ள கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மீட்பு துறையினர் இருவர் உடலையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28-Oct-2024