நுாறு நாள் வேலை திட்டம்; கள ஊழியர்களுக்கு பயிற்சி
திருப்பூர்; நுாறுநாள் வேலை திட்ட களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உதவி பொறியாளர்கள், பணி பார்வையாளர், கம்ப்யூட்டர் உதவியாளர் பங்கேற்றனர். நுாறுநாள் வேலை பொறியாளர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நுாறுநாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்வகையில், 'யுக்தாரா' செயலியில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. 'நுாறுநாள் வேலை திட்ட பணி நடைபெறும் இடம் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டுவிடும்; இதனால், ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மீண்டும் பணி நடைபெற்றதாக பதிவு செய்வது உள்ளிட்ட தவறுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். நுாறுநாள் வேலை திட்ட பணிகள் பதிவில் இந்த புதிய நடைமுறைகள், வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். களப்பணியாளர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பணிபுரியவேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.