உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி மோதல்; ஒருவர் பலி

லாரி மோதல்; ஒருவர் பலி

திருப்பூர்; காங்கயம், முல்லை நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன், 54. இவரது மனைவி ஈஸ்வரி, 48. தம்பதி டூவீலரில் காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. தம்பதி படுகாயமடைந்து, ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை சத்யநாராயணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ