உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் பறிப்பு வழக்கு: மேலும் இருவர் கைது

டூவீலர் பறிப்பு வழக்கு: மேலும் இருவர் கைது

திருப்பூர்: கடந்த மாதம் 25ம் தேதி, தாராபுரத்தை சேர்ந்த அருண்குமார், 21. நண்பர் கோகுல், 22. இவர்களை சந்திக்க திண்டுக்கல்லை சேர்ந்த நண்பர்கள், நான்கு பேரும் வந்தனர். மது அருந்தியவர்கள், போதையில் தகராறு ஏற்பட்டது. அருண்குமார், கோகுல் ஆகியோரை தாக்கி விட்டு, டூவீலர், மொபைல் போனை, பறித்து சென்றனர். புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் சந்தேகப்படும் விதமாக சென்ற, நான்கு பேரிடம் விசாரித்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன், 29, கவியரசு, 26, தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித், 35, கணேசன், 24 என, நான்கு பேர் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, டூவீலர், போனை பறிமுதல் செய்தனர். இதே வழக்கில் தொடர்புடைய, தமிழசரன், 24 மற்றும் முத்துக்குமார், 31 ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ