அரசு பள்ளி மாணவருக்கு சீருடை
திருப்பூர்; திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது. பள்ளியில், 330 பேர் படித்து வருகின்றனர். ஒற்றை பெற்றோர் உடைய மாணவர்கள், பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்கள் என, 20 பேருக்கு தேவகி கார்மெண்ட்ஸ் உரிமையாளர் வாசுதேவன், 11 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பள்ளி சீருடைகள் நன்கொடையாக வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.