உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்படுத்த முடியாத சாலை

பயன்படுத்த முடியாத சாலை

பூமலுார் ஊராட்சி வலையபாளையம் பகுதியில் பி.ஏ.பி., வாய்க்கால் கடந்து செல்கிறது. இதில் பூமலுார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால், தரைப்பாலம் மற்றும் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. கற்கள் ரோட்டில் பரவிக்கிடக்கிறது. பூமலுார் - வலையபாளையம் இடையே உள்ள ரோட்டை விசைத்தறிக் கூடங்கள், விவசாயத் தோட்டங்கள் சென்று வருவோர் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்த முடியாததால், கிடாத்துறை வழியாக 4 கி.மீ., துாரம் தேவையற்ற வகையில் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வாய்க்காலை சீரமைத்து பொதுமக்கள் அவதிக்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை