உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமண மண்டப வாடகை உயர்கிறது

திருமண மண்டப வாடகை உயர்கிறது

அவிநாசி: அவிநாசி தாலுகா திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீசரஸ்வதி மஹாலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பொன்னுகுட்டி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தரா ஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரபு ரத்தினம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சரஸ்வதி மஹால் உரிமையாளர் ராஜ மாணிக்கம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விதமான வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றால் மண்டப உரிமையாளர்களின் பொருளாதார சிரமங்களை குறைக்க 10 முதல் 20 சதவீதம் வரை மண்டப வாடகையை உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை