தொழிலாளி பலி
திருப்பூர்; ஈரோடு, வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 60. கூலி தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி, முத்துார் - ஈரோடு ரோட்டில் மொபட்டில் ெசன்ற போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார்.ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.