உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கார் மரத்தில் மோதி இளைஞர் பலி

 கார் மரத்தில் மோதி இளைஞர் பலி

உடுமலை : உடுமலை, யு.கே.பி., நகரைச்சேர்ந்த, உத்தமராஜ் மகன் விக்னேஷ்,32. சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, பிரதீபா என்ற மனைவி உள்ளார். இரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்ததால், உடுமலை வந்துள்ளார். நேற்று காலை, காரில் திருப்பூரிலுள்ள மாமனார் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த நிலையில், உடுமலை- பல்லடம் ரோட்டில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரத்திலுள்ள புளிய மரத்தில் மோதி கார் கவிழ்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார். குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை