பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்புதிருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வரும் நிலையில், தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி பங்குனி மாத பவுர்ணமி திதி, நாளை, 12ம் தேதி அதிகாலை, 4:13 மணி முதல், நாளை மறுநாள், 13ம் தேதி காலை, 6:03 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.