வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதோ புறப்புட்டேன்... அங்குதான்வரேன்....
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் சிவன் கோவில் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்டும் பணி துவங்கியுள்ளது. அதற்கான பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். கருவறை அருகே பள்ளம் தோண்டியபோது, குவியல் குவியலாக தங்க காசு கள் தென்பட்டன. இதுகுறித்து, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்க நாணயங்களின் மீதிருந்த மண்ணை அகற்றி, துாய்மைப்படுத்தி எண்ணியபோது, 103 தங்க நாணயங்கள் கிடைத்தன. தங்க காசுகளை கைப்பற்றி, எந்த மன்னர் ஆட்சி காலத்து நாணயங்கள் என ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதோ புறப்புட்டேன்... அங்குதான்வரேன்....