கார் மோதி மாஜி பஞ்., தலைவர் பலி
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்துாரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 85; மாஜி பஞ்., தலைவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற, ஆரணி சைதாப்பேட்டைக்கு டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை, 10:00 மணியளவில் சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆரணி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.