உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலையில் சாதுக்களுக்கு அடையாள அட்டை

தி.மலையில் சாதுக்களுக்கு அடையாள அட்டை

தி.மலை: திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் நடைபாதையில் வசிக்கின்றனர். இதில், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் சிலர், சாதுக்கள் போர்வையில் நடமாடி வருகின்றனர். தற்போது தீப திருவிழா வருவதால், பல வகை குற்றவாளிகள் சாதுக்கள் போர்வையில் திருவண்ணாமலைக்கு வருவர். இதை கண்காணிக்க, நிரந்தரமாக திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு, போலீசார் சார்பில் அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதில், 500க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மற்ற சாதுக்களுக்கும் வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி