தி.மலையில் மஹா தீபம் நிறைவு
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கடந்த, 13-ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் தினமும் கண்டு வழிபட்டு வந்தனர்.கடந்த, 11 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம், நேற்றிரவுடன் நிறைவடைந்தது. இன்று காலை, மஹா தீப கொப்பரை, மலை உச்சியிலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அதிலிருந்து சேகரிக்கப்படும் தீப சுடர் மை பிரசாதம், ஜன., 13ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தன்று, முதலில் நடராஜருக்கு சாத்தப்பட்டு, பின், பக்தர்களுக்கு வழங்கப்படும்.