உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத வளர்பிறை பிரதோஷம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத வளர்பிறை பிரதோஷம்

தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கொடிமரம் அருகே சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரில் அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்தி ஆகியவற்றுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமசிவாய' என, பக்தி கோஷங்கள் எழுப்பியும், சிவ வாத்தியங்களை இசைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி