உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி,:திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த, விழுப்புரத்தை சேர்ந்த வரதராஜன், 49, என்பவரை சுற்றி வளைத்தனர். சென்னை எழும்பூரில் இருந்து, விழுப்புரத்துக்கு ரயிலில் வந்த அவர் வைத்திருந்த பையில், 2 கிலோ தங்கம் மற்றும் நகைகள் இருப்பதாக தெரிவித்தார். அதன் மதிப்பு, 1.33 கோடி ரூபாய். எனினும், அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், கடலுார் விற்பனை வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை