உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பக்ரீத் சாமான் வாங்க சென்ற தாய், மகன் கார் மோதி பலி

பக்ரீத் சாமான் வாங்க சென்ற தாய், மகன் கார் மோதி பலி

திருச்சி : திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகரைச் சேர்ந்த இஸ்மாயில் மனைவி பர்வீன், 30. இவர்களின் மகன் அப்சல், 10. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பக்ரீத் பண்டிகைக்கு சாமான்கள் வாங்க கடைவீதிக்கு பர்வீனும், அவரது மகன் அப்சலும் வந்தனர். இருவரும் கடை வீதியில் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, அவ்வழியே வந்த, 'ஸ்விப்ட் டிசையர்' கார் மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை ஆம்புலன்சில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். பெட்டவாய்த்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி