உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

திருச்சி : மகர ஜோதியன்று வீடுகள், பொது இடங்களில் விளக்கேற்ற சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.சமாஜத்தின் மாநில தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: சபரிமலையில் ஜன., 14 மகரஜோதி விழா நடக்கிறது. அன்று மகரஜோதியை வரவேற்கும் வகையில், வீடு தோறும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.மகர சங்கராந்தி தினத்தில் சூரிய பகவானையும், மகரஜோதியையும் ஒன்றுபடும் நேரமான மாலை 6:30 முதல் இரவு 7:15 மணி வரை உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் குறைந்தது 18 விளக்குகள் ஏற்றிட வேண்டும். அனைத்து வீடுகள், கோயில்கள், முக்கிய சந்திப்புகளில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் விளக்குகள் ஏற்றிடலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை